This is a Hitskin.com skin preview
Install the skin • Return to the skin page
KV, this is for you (Tamil content)
2 posters
Page 1 of 1
KV, this is for you (Tamil content)
தி.மு.க.வினர் சிறை நிரப்பும் போராட்டத்தின் மூலம் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
ஆனால், தி.மு.க.வினர் ஒரு காலத்தில் நடத்தியிருக்க வேண்டிய ஒரு போராட்டத்தை நழுவ விட்டார்கள் என்பது நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 1962 – ல் மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது அவர்கள் போராடியிருக்கலாம். பிரிவினை கேட்பது ஜீவாதார உரிமை என்று சொன்னவர்கள், சத்தம் போடாமல் சமாதி நிலைக்குப் போய் விட்டார்கள். பொதுக் குழுவைக் கூட்டாமல், செயற்குழுவைக் கேட்காமல் கழகத்தின் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது.
இப்போது வரலாற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வினர் மாற்றிப் பேசுகிறார்கள். ‘1962–ல் சீனப் படையெடுப்பு ஏற்பட்டதால், நாட்டுப் பற்றோடு செயல்பட்டு அண்ணாதுரை பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டார்’ என்று சொல்கிறார்கள்.
இது உண்மையல்ல. திராவிட மாயையின் இன்னொரு ஏமாற்று வித்தைதான் இது. உண்மையில் என்ன நடந்தது, யார் காரணம் என்பது பற்றி நேர்முக வர்ணனையைத் தருகிறார் தி.மு.க.வின் தீவிர உறுப்பினரான எம்.எஸ்.வெங்கடாசலம். இவர் எழுதி தமிழ்க்குடில் வெளியிட்டுள்ள ‘நான் கண்ட அண்ணா’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன். “திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுக்கு, திராவிட நாடு பிரச்னை பற்றி அண்ணா விளக்கம் அளித்தார்.
“ ‘இந்தப் பிரச்னையில் கட்சியைக் காப்பதா கொள்கையைக் காப்பதா என்ற கேள்வி எழுந்தது. எந்த ஒரு கட்சிக்கும் கொள்கை தேவை. அது இல்லாமல் கட்சி இயங்க முடியாது. கொள்கைக்குத் தடை விதிக்கப்பட்டபின் என்ன நிலை? இந்தக் கொள்கையைப் பற்றி யாரும் எழுத முடியாது, பேச முடியாது. நாடகம், திரைப்படம் இப்படி எந்தத் துறையும் பயன்படாது. அப்படியே ஒரு சிலர் துணிந்து, தியாகச் சீலர்களாக நீண்ட நாள் சிறைவாசம் ஏற்பார்களானால் என்ன ஆகும்? அப்போது ‘அண்ணா சிறையில் – இன்றோடு 50 நாட்கள்’ என்று எழுத முடியாது. இந்தச் சட்டப்படி எதுவும் முடியாது. உள்ளே இருப்பவர்களைப் பற்றி எழுதவும் முடியாது. பேசவும் கூடாது. நம்முடைய மக்கள் மறதி மிக்கவர்கள். தொடர்ந்தாற்போல் ஆறு மாதங்கள் ஒருவருடைய பெயர் செய்தித்தாள்களில் வரவில்லை என்றால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்றே முடிவு கட்டி விடுவார்கள். செக்கிழுத்த சிதம்பரனார் சிறையை விட்டு வெளியே வந்தபோது, இரண்டே இரண்டு பேர்தான் அவரை வரவேற்றார்கள். அந்தத் தியாகிக்கே அந்த கதி! அவரை விடவா நாமெல்லாம் தியாகம் செய்துவிட முடியும்?’
“இந்த வாதங்களை எல்லாம் அண்ணா உணர்ச்சி பொங்க எடுத்து வைத்தார். அவர் தரப்பு நியாயம், எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. எனவே, மாற்றுக் கருத்து எதையும் சொல்லவில்லை எங்களில் எவரும். கட்சியிலிருந்த இரண்டாம் மட்டத் தலைவர்கள் எந்த அளவுக்குத் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர் என்பதை, அண்ணா ஒளிவு மறைவின்றி எங்களிடம் விளக்கினார். இதோ அவர் விளக்கத்தின் முக்கியப் பகுதி:
“ ‘நாவலர் மேடைதோறும் வீராவேசத்தோடு பேசுகிறார். ஆனால் அவரோ மூன்று மாத சிறை தண்டனைக்கு மட்டுமே நான் தயார் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படையில் ‘எங்களை மூன்று மாதங்கள் மட்டுமே சிறையில் வைத்திருங்கள்’ என்று நான் வாதாட முடியுமா? என்.வி. நடராசன், ‘நான் ஒரு வருஷம் உள்ளே இருக்கத் தயார். ஆனால், பிள்ளைகளின் திருமணத்திற்குப் பிறகுதான் முடியும்’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தத் திருமணங்கள் முடிகிற வரை எங்களைக் கைது செய்து விடாதீர்கள் என்று நான் கெஞ்ச முடியுமா? நடக்கிற காரியமா இது? மாணவர் கழகத்தின் மாவீரன் என்று பெயர் பெற்ற ஆலடி அருணா, மூன்று மாதப் போராட்டத்திற்கு மட்டுமே தயார் என்கின்றார்... இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்?”
இதுதான் பிரிவினைக் கோரிக்கை பீஸ் பீஸாகிப் போன விவரம்.
ஆனால், தி.மு.க.வினர் ஒரு காலத்தில் நடத்தியிருக்க வேண்டிய ஒரு போராட்டத்தை நழுவ விட்டார்கள் என்பது நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது. 1962 – ல் மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டு வந்தபோது அவர்கள் போராடியிருக்கலாம். பிரிவினை கேட்பது ஜீவாதார உரிமை என்று சொன்னவர்கள், சத்தம் போடாமல் சமாதி நிலைக்குப் போய் விட்டார்கள். பொதுக் குழுவைக் கூட்டாமல், செயற்குழுவைக் கேட்காமல் கழகத்தின் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டது.
இப்போது வரலாற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் தி.மு.க.வினர் மாற்றிப் பேசுகிறார்கள். ‘1962–ல் சீனப் படையெடுப்பு ஏற்பட்டதால், நாட்டுப் பற்றோடு செயல்பட்டு அண்ணாதுரை பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டார்’ என்று சொல்கிறார்கள்.
இது உண்மையல்ல. திராவிட மாயையின் இன்னொரு ஏமாற்று வித்தைதான் இது. உண்மையில் என்ன நடந்தது, யார் காரணம் என்பது பற்றி நேர்முக வர்ணனையைத் தருகிறார் தி.மு.க.வின் தீவிர உறுப்பினரான எம்.எஸ்.வெங்கடாசலம். இவர் எழுதி தமிழ்க்குடில் வெளியிட்டுள்ள ‘நான் கண்ட அண்ணா’ என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன். “திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுக்கு, திராவிட நாடு பிரச்னை பற்றி அண்ணா விளக்கம் அளித்தார்.
“ ‘இந்தப் பிரச்னையில் கட்சியைக் காப்பதா கொள்கையைக் காப்பதா என்ற கேள்வி எழுந்தது. எந்த ஒரு கட்சிக்கும் கொள்கை தேவை. அது இல்லாமல் கட்சி இயங்க முடியாது. கொள்கைக்குத் தடை விதிக்கப்பட்டபின் என்ன நிலை? இந்தக் கொள்கையைப் பற்றி யாரும் எழுத முடியாது, பேச முடியாது. நாடகம், திரைப்படம் இப்படி எந்தத் துறையும் பயன்படாது. அப்படியே ஒரு சிலர் துணிந்து, தியாகச் சீலர்களாக நீண்ட நாள் சிறைவாசம் ஏற்பார்களானால் என்ன ஆகும்? அப்போது ‘அண்ணா சிறையில் – இன்றோடு 50 நாட்கள்’ என்று எழுத முடியாது. இந்தச் சட்டப்படி எதுவும் முடியாது. உள்ளே இருப்பவர்களைப் பற்றி எழுதவும் முடியாது. பேசவும் கூடாது. நம்முடைய மக்கள் மறதி மிக்கவர்கள். தொடர்ந்தாற்போல் ஆறு மாதங்கள் ஒருவருடைய பெயர் செய்தித்தாள்களில் வரவில்லை என்றால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என்றே முடிவு கட்டி விடுவார்கள். செக்கிழுத்த சிதம்பரனார் சிறையை விட்டு வெளியே வந்தபோது, இரண்டே இரண்டு பேர்தான் அவரை வரவேற்றார்கள். அந்தத் தியாகிக்கே அந்த கதி! அவரை விடவா நாமெல்லாம் தியாகம் செய்துவிட முடியும்?’
“இந்த வாதங்களை எல்லாம் அண்ணா உணர்ச்சி பொங்க எடுத்து வைத்தார். அவர் தரப்பு நியாயம், எங்களுக்குத் தெளிவாகப் புரிந்தது. எனவே, மாற்றுக் கருத்து எதையும் சொல்லவில்லை எங்களில் எவரும். கட்சியிலிருந்த இரண்டாம் மட்டத் தலைவர்கள் எந்த அளவுக்குத் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர் என்பதை, அண்ணா ஒளிவு மறைவின்றி எங்களிடம் விளக்கினார். இதோ அவர் விளக்கத்தின் முக்கியப் பகுதி:
“ ‘நாவலர் மேடைதோறும் வீராவேசத்தோடு பேசுகிறார். ஆனால் அவரோ மூன்று மாத சிறை தண்டனைக்கு மட்டுமே நான் தயார் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படையில் ‘எங்களை மூன்று மாதங்கள் மட்டுமே சிறையில் வைத்திருங்கள்’ என்று நான் வாதாட முடியுமா? என்.வி. நடராசன், ‘நான் ஒரு வருஷம் உள்ளே இருக்கத் தயார். ஆனால், பிள்ளைகளின் திருமணத்திற்குப் பிறகுதான் முடியும்’ என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தத் திருமணங்கள் முடிகிற வரை எங்களைக் கைது செய்து விடாதீர்கள் என்று நான் கெஞ்ச முடியுமா? நடக்கிற காரியமா இது? மாணவர் கழகத்தின் மாவீரன் என்று பெயர் பெற்ற ஆலடி அருணா, மூன்று மாதப் போராட்டத்திற்கு மட்டுமே தயார் என்கின்றார்... இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்?”
இதுதான் பிரிவினைக் கோரிக்கை பீஸ் பீஸாகிப் போன விவரம்.
MulaiAzhagi- Posts : 1254
Join date : 2011-12-20
Re: KV, this is for you (Tamil content)
Sara, What is the URL?
Kayalvizhi- Posts : 3659
Join date : 2011-05-16
Re: KV, this is for you (Tamil content)
http://www.thuglak.com/thuglak/main.php?x=archive/12_07_2012/subbu_12_07_2012.php
===> KV,
It is from the July 12, 2012 edition of the Thuglak magazine.
You need to be subscriber to access it.
===> KV,
It is from the July 12, 2012 edition of the Thuglak magazine.
You need to be subscriber to access it.
MulaiAzhagi- Posts : 1254
Join date : 2011-12-20
Similar topics
» Tamil Muslim advises Tamil Brahmins to convert (Tamil content)
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» silEdai - a type of pun in tamil (tamil content)
» Tamil women have come a long way (Tamil content)
» Tamil Content -Love for Tamil in Myanmar
» Educating Uppili about Tamil Nadu (100 % TAMIL content)
» silEdai - a type of pun in tamil (tamil content)
» Tamil women have come a long way (Tamil content)
» Tamil Content -Love for Tamil in Myanmar
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|