Blatant murder by a TN cop (Tamil content) Hitskin_logo Hitskin.com

This is a Hitskin.com skin preview
Install the skinReturn to the skin page

Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Blatant murder by a TN cop (Tamil content)

2 posters

Go down

Blatant murder by a TN cop (Tamil content) Empty Blatant murder by a TN cop (Tamil content)

Post by MulaiAzhagi Wed Aug 15, 2012 11:25 pm

http://savukku.net/home1/1602-2012-07-25-04-47-25.html

மருக்கால்குறிச்சி கிராமத்தில் உள்ள குளத்திலிருந்து வண்டல் மண் எடுப்பார்கள். இந்த வண்டல் மண் செங்கல் செய்வதற்குப் பயன்படுகிறது. இந்த மண் எடுப்பதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். இந்த ஆண்டு இந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர், அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் மாணிக்கராஜ். இந்த மாணிக்கராஜ், மருக்கால்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் விஜயக்குமாருக்கு மிக நெருக்கம்.

வண்டல் மண் எடுத்து வந்த மாணிக்கராஜுக்கும், அதே கிராமத்தில் குடியிருக்கும் முருகன் என்பவருக்கும் இந்த வண்டல் மண் எடுப்பது தொடர்பாக பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன. காவல் ஆய்வாளரோடு தனக்கு இருந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, மாணிக்கராஜ், முருகனை ஏதாவது ஒரு வழக்கில் கைது செய்யுமாறு விஜயக்குமாரைக் கேட்டுள்ளார். அதன்படி, விஜயக்குமார், முருகனை திங்களன்று சட்டவிரோதமாக மணல் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளார்.

இது தொடர்பாக திங்களன்று மாலையில், ஆய்வாளர் விஜயக்குமாருக்கு முருகனின் அண்ணன் வானுமாமலை தொலைபேசியில் பேசியுள்ளார். வானுமாமலை அதே கிராமத்தில் இருந்து தினக்கூலிக்கு ட்ராக்டர் ஓட்டும் வேலை செய்து வருகிறார். அப்போது வானுமாமலை அருகில் இருந்தவர்கள், இந்த தொலைபேசி உரையடல் சிறிது நேரத்தில் சண்டையாக மாறியது என்கின்றனர். ஒரு கட்டத்தில் ஆய்வாளர் உன்னை சுட்டுவிடுவேன் என்றதும், “தைரியம் இருந்தால் நேரா வந்து சுட்றா. வரும்போது யூனிபார்ம கழட்டி வச்சுட்டு வாடா” என்று வானுமாமலை பேசியிள்ளார். அந்த உரையாடல் முடிந்ததும் வானுமாமலை வழக்கம் போல வீடு திரும்பியுள்ளார்.

திங்களன்று இரவு, மருக்கால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தளவாய் மற்றும் சுப்பையா ஆகிய இரு சகோதரர்கள் குடித்து விட்டு சண்டையிட்டுள்ளனர். ஆய்வாளர் விஜயக்குமார் அவர்கள் இருவரையும் திங்களன்று இரவே கைது செய்துள்ளார். மறுநாள் செவ்வாயன்று மூன்றரை மணிக்கு, கைது செய்யப்பட்ட தளவாய் மற்றும் சுப்பையாவை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு, யூனிபார்ம் போடாமல் மப்டியில், மருக்கால்குறிச்சி கிராமத்தை நோக்கி வந்துள்ளார் விஜயக்குமார்.

மருக்கால் குறிச்சி கிராமத்தின் நுழைவாயிலில் உள்ள கோயில் அந்த ஊர் மக்கள் கூடும் இடம். அதைத்தாண்டியே ஊருக்குள் செல்ல முடியும். அந்த இடத்துக்கு ஜீப் வந்ததும், அந்த கோயிலருகே, மரத்தடியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கலைந்து செல்கின்றனர். அப்போது ஜீப்பிலிருந்த தளவாய் மற்றும் சுப்பையாவிடம் விஜயக்குமார், அந்த கூட்டத்தில் வானுமாமலை இருக்கிறாரா என்று கேட்டு, அவரைக் கூப்பிடுமாறு சொல்லியிருக்கிறார்.

இவர்கள் இருவரும் அழைத்ததும், வானுமாமலை ஜீப்பை நோக்கி வந்திருக்கிறார். வானுமாமலை வருவதைப் பார்த்ததும் தன் கைத்துப்பாக்கியை எடுத்த விஜயக்குமார் வானுமாமலையை நோக்கிக் சுட, சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார் வானுமாமலை வானுமாமலையை விஜயக்குமார் சுட்ட விஷயம் உடனடியாக ஊருக்குள் பரவி, மக்கள் ஜீப் செல்லும் சாலையை மறித்துள்ளனர். ஆனால் ஜீப் ட்ரைவர் சாமர்த்தியமாக வண்டியை ஓட்டி தப்பித்துச் சென்று விட்டார்.


MulaiAzhagi

Posts : 1254
Join date : 2011-12-20

Back to top Go down

Blatant murder by a TN cop (Tamil content) Empty Re: Blatant murder by a TN cop (Tamil content)

Post by Marathadi-Saamiyaar Wed Aug 15, 2012 11:57 pm

Any wonder that the Tamil movies and ground situation mimic each other pushing the envelope further...

Marathadi-Saamiyaar

Posts : 17675
Join date : 2011-04-30
Age : 110

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum