Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

karunanidhi's destructive legacy (Tamil content)

Go down

karunanidhi's  destructive legacy (Tamil content) Empty karunanidhi's destructive legacy (Tamil content)

Post by Rishi Thu Feb 07, 2013 10:57 pm

அத்விகா on December 31, 2012 at 9:52 pm
ஈவெரா மற்றும் அவரது தம்பிகள் என்று சொல்லிக்கொண்ட துரோகிகள் தமிழ் மொழிக்கும், தமிழினத்துக்கும் செய்த துரோகங்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. எந்த ஒரு மனித இனமும் உயிர்வாழ தண்ணீரும், நிலமும் அடிப்படை ஆகும். திராவிட இயக்கங்கள் பெரியார் வழிவந்தவை என்று சொல்லிக்கொண்டு, தமிழினத்தை திட்டமிட்டு அழித்தன. எப்படி:-

1. 1974- ஆம் ஆண்டில் முடிவடைந்த காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் , போண்டா சாப்பிட்டுக்கொண்டிருந்தார் அப்போதைய முதல்வர் மற்றும் மூத்த தலைவர் கருணா. அதன் விளைவாக தமிழகம் வறண்டு , பாலைவனம் போல ஆகிவிட்டது. தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்துவிட்டது.

2. கச்ச தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த இந்திரா அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்யாமல், விஞ்ஞான முறை ஊழல்களை செய்ததாக சர்காரியாவிடம் சான்றிதழ் பெற்றார். இதன் விளைவு ராமேசுவரம் மற்றும் தமிழக மீனவர்கள் நியாயமான எல்லைக்குள் கூட மீன் பிடிக்க முடியாமல் , சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லபடுகிறார்கள்.


3. தமிழகம் முழுவதும் சாராய அடிமை ஆக்கி, 1-9-1972 முதல் மதுவை அறிமுக படுத்தி இளைய சமூகத்தினரை பாழாக்கினார் திராவிட திருவாரூர் தலை.

4. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி சிவிலியன் தமிழரை கொல்ல , சோனியாவின் படைக்கு சலாம் போட்டு , தன்னுடைய மக்களுக்கு துரோகம் செய்தார்.

5. இந்தி எதிர்ப்பு என்று சொல்லி மாணவர்களை தூண்டிவிட்டு, கடந்த நாற்பத்தேழு வருட காலமாக , தமிழக மாணவர்களை தெருவில் நிறுத்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார். வெளிமாநிலங்களுக்கு போய்க்கூட பிழைக்க முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டார். ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய திராவிட மாணவர்கள் இந்தி படித்து, இந்தியா முழுவதும் நல்ல வேலை வாய்ப்புக்களை பெறுகிறார்கள். ஆனால் தமிழக மாணவர்களை மட்டும் இந்தி படிக்காதே என்று சொல்லி , நாட்டையே பாழ் படுத்திய பாவிகள் தான் திராவிட திருட்டு இயக்கத்தினர். இந்த தலிவரின் குடும்ப பேரன்களும், கொள்ளுபேரன் பேத்திகளும் மட்டும் இந்தி, ஜெர்மன், ஸ்பானிஷ் என்று பல மொழிகளை கற்கின்றனர். ஊருக்கு தானடி உபதேசம், உனக்கும் இல்லை எனக்கும் இல்லை.

6. புற்றீசல் போல ஆங்கில மீடியம் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து, தமிழை புதை குழிக்கு தள்ளினார்கள். தமிழ் காட்டுமிராண்டி மொழி , தமிழன் காட்டுமிராண்டி என்று சொன்ன ஆளை , தமிழர் தலைவர் என்று கூறி, தமிழனுக்கு அவமானத்தை உண்டுபண்ணினர்.


திராவிட மோசடி இயக்கங்களால் தமிழுக்கும், தமிழனுக்கும் விளைந்த இன்னல்களை பட்டியல் போட்டால் நாற்பது புத்தகங்கள் எழுதலாம். திராவிட இயக்கங்களான திக மற்றும் திமுக மற்றும் அதன் அடிவருடிகளான விசி போன்றவை தற்குறி இயக்கங்களே ஆகும். இந்த இயக்கங்கள் முற்றிலும் ஒழிக்கப்படாவிட்டால், தமிழகம் இனி தலை எடுக்கவே முடியாத இழிநிலை ஏற்படும்.மக்கள் இந்த மோசடி இயக்கங்களை புரிந்து கொண்டுவிட்டனர். விரைவில் நல்ல பாடம் கொடுக்க இருக்கின்றனர்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum