Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Good editorial on sex crimes in India (Tamil content)

Go down

Good editorial on sex crimes in India (Tamil content) Empty Good editorial on sex crimes in India (Tamil content)

Post by Rishi Sun Nov 17, 2013 12:11 am

பாலியல் குற்றங்கள் வளர்வதற்கான காரணிகளைப் பட்டியலிட்டு அவைகளைத் தடுக்கவும் குறைக்கவுமான நடவடிக்கைகளே பயன்தரும்.
முதலாவது, பெற்றோர்கள் பிள்ளைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தாது சுதந்திரமாக விட வேண்டும் எனவும், பெண்கள் எப்படியும் உடை உடுத்தலாம், அது அவர்களின் விருப்புரிமை எனவும், வயதுப் பெண்கள் ஆண்களுடன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சுற்றலாம். பொது இடங்களிலும் அரங்குகளிலும் ஆடிப்பாடிக் குடித்துக் கும்மாளம் போடலாம் எனவும், மணமாகாமலே பாலியல் உறவாடலாம், பிள்ளைகளைப் பெறலாம், ஒருவருடன் உறவாடி வேறொருவரை மணக்கலாம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் சுதந்திரம் வேண்டும் எனவுமாக முற்போக்கு என்னும் பெயரில் செய்யப்படும் பிரச்சாரங் களை நிறுத்த வேண்டும்.
பெற்றோரின் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டு வளர்பவன் எவனும் பாலியல் வன்முறையில் ஈடுபட மாட்டான். அத்தகையோர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணுமளவாகவே இருக்கும். பெண்கள் அப்படித்தான் இருப்பார்கள். அது அவர்களின் பிறப்புரிமை. ஆண்கள் கண்டுகொள்ளக் கூடாது என்னும் வாதம், எங்கள் வீட்டுப்பசுமாடு ஒரு மாதிரி, உங்கள் வீட்டுக் காளையைக் கட்டிப் போடுங்கள் என்பதன்றி வேறல்ல. உணர்வோடும் வழியோடாது சுயக்கட்டுப்பாட்டுடன் நெறிப்பட வாழ்தலே மனிதன் என்பதன் அடையாளமாவது. அன்றேல், மனிதன் விலங்கிலிருந்து வேறாக மாட்டான். பாலியல் சுதந்திரம் என்பது நெறிப்பட வாழ்தலை மறுதலிப்பது. அதன் ஒரு கூறுதான் பாலியல் வன்முறையும்.

இரண்டாவது, பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் நிலையில் உள்ளவர்கள், தங்களின் பிள்ளைகளைப் பெரிய படிப்பாளியாக்க வேண்டும் என்னும் அக்கறையில் பாதியளவாவது, பிள்ளைகளை நல்லவர்களாக்க வேண்டும் என்பதிலும் காட்ட வேண்டும்.

மற்றவர்களுக்குச் சங்கடமோ, நட்டமோ ஏற்படாதபடி நடந்து கொள்ளும் மனப்பான்மையைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.

பெரிய படிப்பு படித்து, பெரிய உத்தியோகம் பார்த்து, லட்சம் லட்சமாகச் சம்பாதிப்பது மட்டும் போதாது; நல்லவன் என்னும் பெயரோடும் மதிப்போடும் உறவுகள் சூழ வாழ்தல் முக்கியமானது என்பதைச் சிறு வயது முதலே திரும்பத் திரும்பச் சொல்லி மனத்தில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும். புகைத்தல், குடித்தல் முதலான பழக்கங்களுக்கு ஆளாகாதவாறு கண்ணுங் கருத்துமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேற்கத்தியரின் பழக்க வழக்கங்களை அப்படியே பின்பற்றுதல் நல்லதல்ல என்பதை உளங்கொளச் செய்ய வேண்டும். பிள்ளைகளின் கைபேசி, கணினிப் பயன்பாட்டையும் கண்காணிக்க வேண்டும்.
மூன்றாவது, ஆபாசக் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள், பள்ளிப் பிள்ளைகள் காதலில் ஈடுபடுவதை நியாயப்படுத்தும் திரைப்படங்களுக்கு எதிராகவும், பேருந்துகளில் பாலியல் சார்ந்த பாடல்களின் ஒலிபரப்பு, பத்திரிகைகளில் பெண்களின் கவர்ச்சிப் படங்களை இட்டு நிரப்புதல், அரசின் மது விற்பனை, மதுபானக் கடைகள் என்பவற்றிற்கு எதிராகவும் பெண்கள் ஆவேசத்துடன் போராட வேண்டும்.
÷பாலியலில் பாதிப்பு என்பது ஆணுக்கல்ல பெண்ணுக்கென்பதுதான் இயற்கை நியதியாகிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் சேலையில் முள் விழுந்தாலும், முள்ளில் சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குத்தான் என நயவுரையாக எச்சரித்தார்கள். அந்த இயற்கை நியதியை மாற்ற மாட்டாதவரை பெண்கள் கூடுதல் கட்டுப்பாட்டிற்கு உட்படுதல் தவிர்க்க முடியாதது என்பதுதான் தவிர்க்கக் கூடாத - கசப்பான உண்மையாகிறது. எந்த முற்போக்கு முழக்கத்தாலும் இந்தக் கசப்பை மாற்ற முடியாது.


http://dinamani.com/editorial_articles/2013/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A/article1888057.ece

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum