இந்தியாவில் தனி நாடு சாத்தியமா?
2 posters
Page 1 of 1
இந்தியாவில் தனி நாடு சாத்தியமா?
இப்போது தமிழ் ஈழம் கோரி எந்தத் தமிழரும்
இலங்கையில் கோஷமிடவில்லை என்பதுதான் உண்மை. அரை வயிறு கஞ்சியோடு உயிர்
வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் அநேகம். யாழ்ப்பாணத்தில் எங்களிடம்
பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தமிழகத்தின் நிலை என்ன?
கேரளா தண்ணீர் தராது. கர்நாடகா தண்ணீர் தராது. ஆந்திரா தண்ணீர் தராது.
அதற்கு மத்திய அரசும் உதவாது. ஆனால், நெய்வேலியிலிருந்து பிற
மாநிலங்களுக்கு மின்சாரம் போகும். கூடன்குளம் அணு உலை, அப்பகுதி மக்களின்
எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் அமையும். ஆனால் மின்சாரம் அயல்
மாநிலத்திற்குப் போகும்.
“தமிழக மீனவர்கள் தாக்குதல் மீது, மத்திய அரசு நடவடிக்கை ஏதும்
எடுப்பதில்லை என்ற புகார் பலரிடம் இருக்கிறது. ‘தமிழகத்திற்குப் போதிய அளவு
நிதி ஒதுக்குவதில்லை, மண்ணெண்ணெய் அளவைக் குறைக்கிறது’ என்று வாரம் ஒரு
முறையாவது மத்திய அரசு மீது மாநில அரசு புகார் பட்டியல் வாசிக்கிறது. இந்த
நிலையில் தமிழகம் என்ன செய்கிறது? தனி நாடா கேட்கிறது? தொடர்ந்து மத்திய
அரசிடம் போராடுகிறது. சட்டங்களின் மூலம் நீதிமன்றத்தை அணுகுகிறது. பிரிந்து
சென்றால் இதைவிட பெரிய பிரச்னைகள் பல உருவாகும் என்பதைத்தானே நீங்கள்
இலங்கை தமிழருக்கும் உபதேசிக்க வேண்டும்?
“இந்தியாவில் தெலுங்கானா என்ற ஒரு மாநிலத்தை பிரித்துத் தருவதிலேயே
உங்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கிறது? அப்படியிருக்கும்போது ஒரு
நாட்டைப் பிரித்து தருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? வன்முறையால் ஒரு
நாட்டைப் பிரித்து விட்டால், எல்லா நாடுகளிலும் அதுபோன்ற நிலை தோன்றி
விடும் என்றுதான் எந்த நாடும் பயப்படும். எனவே, இதை ஆதரிக்கக்கூடாது
என்றுதான் எந்த நாடும் மனதளவில் சிந்திக்கும். எனவே, உலகளவில், தனி
நாட்டிற்காக இனிமேல் ஆதரவு திரட்ட முடியாது.”
இலங்கையில் கோஷமிடவில்லை என்பதுதான் உண்மை. அரை வயிறு கஞ்சியோடு உயிர்
வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் அநேகம். யாழ்ப்பாணத்தில் எங்களிடம்
பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தமிழகத்தின் நிலை என்ன?
கேரளா தண்ணீர் தராது. கர்நாடகா தண்ணீர் தராது. ஆந்திரா தண்ணீர் தராது.
அதற்கு மத்திய அரசும் உதவாது. ஆனால், நெய்வேலியிலிருந்து பிற
மாநிலங்களுக்கு மின்சாரம் போகும். கூடன்குளம் அணு உலை, அப்பகுதி மக்களின்
எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் அமையும். ஆனால் மின்சாரம் அயல்
மாநிலத்திற்குப் போகும்.
“தமிழக மீனவர்கள் தாக்குதல் மீது, மத்திய அரசு நடவடிக்கை ஏதும்
எடுப்பதில்லை என்ற புகார் பலரிடம் இருக்கிறது. ‘தமிழகத்திற்குப் போதிய அளவு
நிதி ஒதுக்குவதில்லை, மண்ணெண்ணெய் அளவைக் குறைக்கிறது’ என்று வாரம் ஒரு
முறையாவது மத்திய அரசு மீது மாநில அரசு புகார் பட்டியல் வாசிக்கிறது. இந்த
நிலையில் தமிழகம் என்ன செய்கிறது? தனி நாடா கேட்கிறது? தொடர்ந்து மத்திய
அரசிடம் போராடுகிறது. சட்டங்களின் மூலம் நீதிமன்றத்தை அணுகுகிறது. பிரிந்து
சென்றால் இதைவிட பெரிய பிரச்னைகள் பல உருவாகும் என்பதைத்தானே நீங்கள்
இலங்கை தமிழருக்கும் உபதேசிக்க வேண்டும்?
“இந்தியாவில் தெலுங்கானா என்ற ஒரு மாநிலத்தை பிரித்துத் தருவதிலேயே
உங்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கிறது? அப்படியிருக்கும்போது ஒரு
நாட்டைப் பிரித்து தருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? வன்முறையால் ஒரு
நாட்டைப் பிரித்து விட்டால், எல்லா நாடுகளிலும் அதுபோன்ற நிலை தோன்றி
விடும் என்றுதான் எந்த நாடும் பயப்படும். எனவே, இதை ஆதரிக்கக்கூடாது
என்றுதான் எந்த நாடும் மனதளவில் சிந்திக்கும். எனவே, உலகளவில், தனி
நாட்டிற்காக இனிமேல் ஆதரவு திரட்ட முடியாது.”
Rishi- Posts : 5129
Join date : 2011-09-02
Re: இந்தியாவில் தனி நாடு சாத்தியமா?
Losers will always be losers.
"All great struggles of history have been won by superior will power wrestling victory in the teeth of odds." - Winston Churchill
"All great struggles of history have been won by superior will power wrestling victory in the teeth of odds." - Winston Churchill
Kayalvizhi- Posts : 3659
Join date : 2011-05-16
Re: இந்தியாவில் தனி நாடு சாத்தியமா?
Kayalvizhi wrote:Losers will always be losers.
"All great struggles of history have been won by superior will power wrestling victory in the teeth of odds." - Winston Churchill
Those who get fat because of over eating will lose.
Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|