Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு: தேமுதிக நிர்வாகி கைது

Go down

 மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு: தேமுதிக நிர்வாகி கைது Empty மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு: தேமுதிக நிர்வாகி கைது

Post by Rishi Wed Aug 28, 2013 10:11 pm

http://dinamani.com/edition_chennai/chennai/2013/08/29/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/article1757184.ece


ஆவடி அருகே மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டியதாக தேமுதிக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: அம்பத்தூர் கொரட்டூர் ரயில் நிலைய சாலையில் வசிப்பவர் சற்குரு செந்தில்குமார் (40). இவர் மத்திய சென்னை தேமுதிக மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். செந்தில்குமார், கொரட்டூரில் ஒரு லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவர் மனைவி கோகிலா (32). இத் தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
செந்தில்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தகாத தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோகிலாவுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.
இது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பு மதுரையில் வசிக்கும் தனது பெற்றோருக்கு கோகிலா தெரியப்படுத்தினார். இதையடுத்து கோகிலாவின் தந்தை சுகுமார் (61), தாய் ஜானகி (57) ஆகியோர் சென்னை வந்து செந்தில்குமாரிடம் பேசி, அவருக்கு அறிவுரை கூறிவிட்டுச் சென்றனராம். அதன்பின்னரும் செந்தில்குமார், அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கோகிலா, சில நாள்களுக்கு முன்பு தனது பெற்றோரை சென்னைக்கு வருமாறு அழைத்தாராம். செவ்வாய்க்கிழமை சென்னை வந்த அவர்கள், செந்தில்குமாரை கண்டித்தனராம். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
வாக்குவாதம் முற்றவே செந்தில்குமார், சுகுமாரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஜானகி, செந்தில்குமாரை தடுக்க முயன்றாராம். அப்போது ஜானகிக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாம். அங்கிருந்து செந்தில்குமார் தப்பியோடி விட்டார்.
பலத்த காயமடைந்த சுகுமாரும், ஜானகியும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து கோகிலா, கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை புதன்கிழமை கைது செய்தனர்.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum