Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

to KV: Karuna's interview Part 1

Go down

to KV: Karuna's interview Part 1 Empty to KV: Karuna's interview Part 1

Post by Rishi Thu Jun 13, 2013 9:52 pm

மைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் என்றால், தமிழகத்தில் பலருக்கு இவரைத் தெரியாது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தளபதியாக விளங்கிய கருணா என்றால்தான் பலருக்கும் தெரியும். கருணா என்பது புலிகள் இயக்கம் அவருக்குச் சூட்டிய பெயர். புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிச் சரணடைந்த அவருக்கு, இலங்கை அரசு, நியமன எம்.பி. பதவியையும், இணை அமைச்சர் பொறுப்பையும் வழங்கியுள்ளது. கருணா என்ற பெயரை தற்போது யாரும் அங்கு பயன்படுத்துவதில்லை. 

கேள்வி: இன்று அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகும் நீங்கள், ஆரம்பத்தில் ஏன் ஆயுதம் தூக்கினீர்கள்? 

பதில்: தமிழ் இளைஞர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய 1980 காலகட்டத்தில் அதற்கான தேவை உண்மையிலேயே இருந்தது. எங்களிடம் இளமையும், வேகமும் இருந்தது. அதனால்தான் நாங்கள் ஆயுதம் தூக்கினோம். அப்போது இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எங்களுக்கு முழு ஆதரவு தந்தார். உண்மையிலேயே இந்திரா காந்தியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். 

கேள்வி: பின்னர் ஏன் விலகினீர்கள்? 

பதில்: இந்திய அரசும், தமிழக அரசும் அப்போது எங்களுக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தன. ஆனால், விடுதலைப் புலிகள் அதற்குரிய பதில் மரியாதையைச் செலுத்தத் தவறி விட்டனர். ராஜீவ் காந்தி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தபோது, அதைப் புலிகள் இயக்கம் ஏற்றிருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மாறாக, இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டோம். மற்ற எல்லா தமிழ்ப் போராளிகள் இயக்கங்களும் இந்திய அரசின் ஆலோசனையை ஏற்று, வடகிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்புக்குச் சம்மதித்து, இந்திய ராணுவத்தின் பக்கம் இருந்தன. ‘தனி நாடு வேண்டாம்; தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் பெற்றுத் தருகிறோம்’ என்ற இந்தியாவின் அருமையான திட்டத்தை, அன்று நாங்கள் மட்டும் எதிர்த்து, இந்திய ராணுவத்துடனேயே போரிட்டோம். இதனால் வடகிழக்கு இணைந்த மாகாணசபை என்ற அரிய வாய்ப்பு கைநழுவிப் போயிற்று. அந்தத் தவறு போதாது என்று புலிகள், பழிவாங்கும் நடவடிக்கையாக ராஜீவ் காந்தியைக் கொலை செய்தனர். அந்த நிமிடம் முதல் இந்திய அரசு, இலங்கை விவகாரத்தைப் பொறுத்து பின்வாங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 

அதன் பிறகு ஸ்காண்டிநேவியன் நாடுகளின் பேச்சுவார்த்தையில் சமஷ்டி முறைத் தீர்வுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. ஆஸ்லோவில் (நார்வேயின் தலைநகரம்) வைத்து ஒரு உடன்பாடும் கையெழுத்தானது. அந்தப் பேச்சுவார்த்தைக் குழுவில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். ஒரு மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையை முறியடித்து, ‘ஓயாத அலைகள்’ போர் நடவடிக்கை மூலம் புலிகள் ஒரு பெரிய வெற்றியைப் பெற்ற நேரத்தில், அந்த பேச்சுவார்த்தை நடந்தது. இதனால், அப்போது பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்க அந்தப் பேச்சுவார்த்தையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். 


மேற்கத்திய நாடுகளின் வெவ்வேறு நகரங்களில் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. சமஷ்டி முறை தீர்வுக்கு இலங்கை அரசு ஒத்துக் கொண்டது. அந்த முறையை எப்படி அமல் செய்வது என்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முடிவானது. ஆஸ்லோவில் வைத்து இந்த ஒப்பந்தத்தில் ஆன்டன் பாலசிங்கமும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர். ஆனால், பிரபாகரன் இதை ஏற்கவில்லை. ‘யாரைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டீர்கள்’ என்று எங்களைக் கடிந்து கொண்டார். அங்குதான் எனக்கும், பிரபாகரனுக்கும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த கருத்து வேறுபாடு பெரிதாக வெடித்தது. 

அப்போதும் நான் அவருக்கு எடுத்துச் சொன்னேன். ‘இதுவரை போராடியது வேறு. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் உலக நாடுகள் எடுத்துள்ள முடிவு, நமக்கு இனிச் சாதகமாக இருக்காது. அந்தச் சம்பவத்தை ஒட்டி, உலக நாடுகள் அத்தனையும் பயங்கரவாத தடுப்பில் ஒருமித்த முனைப்புக் காட்டத் துவங்கி விட்டன. அதற்குப் புலிகள் இயக்கமும் விதிவிலக்கல்ல. 26 நாடுகள் ஏற்கெனவே இயக்கத்திற்குத் தடை விதித்து விட்டன. சமரசத்தின் மூலம் சமஷ்டி அதிகாரத்தைப் பெறுவதே நல்லது’ என்று வாதிட்டேன். ஆனால், பிரபாகரன் கேட்கவில்லை. எங்களது ஆஸ்லோ பேச்சுவார்த்தையை இந்தியாவும் மேற்பார்வையிட்டது. நம்பியார் என்ற அதிகாரியை அதற்காக நியமித்திருந்தார்கள். இந்தியாவும் அந்தத் தீர்வை வரவேற்றது. ஆனால், பிரபாகரன் மட்டும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் நான் வெளியேறினேன். பிரபாகரனின் பிடிவாதத்தால் தொடர்ந்து அழிவுகளும், முள்ளிவாய்க்கால் சம்பவமும் நடந்து முடிந்து விட்டன. 



கேள்வி: ஆக, இனி இலங்கையில் தனிநாடு என்பது சாத்தியமில்லையா? 

பதில்: சிறந்த மாகாண சபை ஆட்சி முறையைக் கொண்டு, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக உலகில் வாழ்ந்து காட்டுகிறது. அதை ஏன் இலங்கையிலும் செய்து காட்ட முடியாது? தனி நாடு என்ற கோரிக்கையை இனி உலகம் ஏற்காது. அதற்கு எந்த நாடும் ஆதரவும் தெரிவிக்காது. 

இதைத் தமிழக மக்களும், இளைஞர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களது ஆதரவு மற்றும் எழுச்சியை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். இங்குள்ள தமிழர்களுக்காக அவர்கள் குரல் கொடுப்பது நல்ல விஷயம்தான். அதைச் சரியான முறையில் செய்து நல்ல ஒரு அதிகாரப் பகிர்வைத் தமிழர்கள் பெறுவதற்கும், நல்ல அபிவிருத்திப் பணிகளை பெறுவதற்குமான முயற்சியாக மாற்றினால், தமிழகத்தில் ஒரு மாகாண சபையின் கீழ் எப்படி தமிழர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்களோ, அதே போல் இங்குள்ள தமிழர்களும் வாழ முடியும். 

கேள்வி: இலங்கை அரசு மீது வைக்கப்படும் போர்க் குற்றங்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 

பதில்: இலங்கை அரசை மட்டும் குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் பயனில்லை. எந்த நாட்டு அரசாங்கமாக இருந்தாலும், தனது நாட்டில் நடக்கும் ஒரு சச்சரவை, ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்கும் அதிகாரமும், கடமையும், உரிமையும் அந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது. இந்தியா உட்பட எந்த நாடாக இருந்தாலும் தனி நாடு கேட்கும் இயக்கங்களை ஒழிக்கவே முயற்சி எடுக்கும். இலங்கையில், அவ்வாறு ஒழிக்கும் முன்பு பல சமரசத் திட்டங்களுக்கு வாய்ப்பு தந்தார்கள். ஆனால், புலிகள் எதற்கும் உடன்படவில்லை. எனவே, எந்தச் சமரசத்திற்கும் தயாராக இல்லாத புலிகள் இயக்கம்தான் அழிவுகளுக்குப் பொறுப்பாக முடியும். 


நீங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கெல்லாம் போய் வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களே நேரடியாகப் பார்த்திருப்பீர்கள். மக்கள் இப்போதுதான் உயிர் பயம் நீங்கி நிம்மதியாக வாழத் துவங்கியுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஏறக்குறைய பழைய நிலை வந்து விட்டது. வடக்கு மாகாணத்தில் மறுகட்டுமானப் பணிகளும், மீள் குடியமர்த்தும் பணிகளும் நடந்து வருகின்றன. 30 ஆண்டுகால அழிவை இரண்டு, மூன்று வருடங்களில் சரி செய்துவிட முடியாது. கண்ணி வெடிகள் உள்ளிட்ட ஆயுதக் குவியல்களை அப்புறப்படுத்தும் பணியே இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், எனது மீள்குடியேற்ற அமைச்சகம் மிகத் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

எல்.எல்.ஆர்.சி. என்ற கமிட்டி, போர் அழிவுகளைப் பற்றி எல்லாப் பகுதிகளுக்கும் சென்று விசாரித்து, ஆராய்ந்து ஒரு வெளிப்படையான அறிக்கையைத் தந்திருக்கிறது. கொல்லப்பட்டவர்கள் பட்டியல், காணாமல் போனவர்கள் பட்டியல், அழிவுகளின் மதிப்பீடு, போர்க்குற்றங்கள் என எல்லாத் தளங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அந்தக் கமிட்டி, தனது கண்டுபிடிப்புகளையும், பரிந்துரைகளையும் தந்துள்ளது. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் இப்போது திட்டமிட்டு வருகிறோம். தற்போது போர் முடிந்து விட்டது. பிடிபட்ட புலிகள் கூட மன்னிக்கப்பட்டு அல்லது குறைந்த தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய எல்லோரும் விடுவிக்கப்பட்டு விட்டனர். சண்டைக்குச் சண்டை, பழிக்குப் பழி என்று கிளம்பினால் குரோதம்தான் அதிகமாகும். இதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இங்குள்ள மக்களும் கோபத்தை மறந்து, ராணுவத்திடம் நெருங்கி, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளத் துவங்கி விட்டனர். 

இந்த நிலையில், இந்திய மக்கள் புதிய போராட்டங்களைத் துவக்கி, குழப்பங்களை உருவாக்குவது நல்லதல்ல. அது இங்குள்ள மக்களைத்தான் மேலும் பாதிக்கும். போரில் அழிந்தது தமிழர்கள் மட்டுமில்லை. முஸ்லிம்களும் புலிகளால் அழிக்கப்பட்டுள்ளனர். ராணுவ இலக்கு அல்லாத எத்தனையோ பொதுஇடங்களில் புலிகள் வெடித்த குண்டுகள் மூலம், எவ்வளவோ அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்களின் இறப்புகளுக்கு நியாயம் கேட்கப் போனால், சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தங்கள் அழிவுகளுக்குப் பதில் கேட்பார்கள். 

தமிழ் மக்களுக்கு, பழையபடி வீடுகள் கட்டிக் கொடுத்து, அவர்களுக்குப் பொருளாதார வழி வகைகள் செய்து, தங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் கொண்டு செலுத்தவும், அடுத்த தலைமுறையைச் சிறந்த முறையில் உருவாக்கவும் உதவுவதுதான் இன்றைய அவசரத் தேவை. இலங்கை அரசாங்கம் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வட பகுதிக்கு ஒதுக்கி உள்ளது. இதில் 10 சதவிகிதம் கூட சிங்கள மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படவில்லை. விரைவில் வட மாகாண சபைத் தேர்தலும் வரவிருக்கிறது. எனவே, தற்போது நிலவும் அமைதி தொடர்வதற்கும், தமிழர் சம உரிமையும், அதிகாரமும் பெற உதவுவது மட்டுமே இன்றைய தேவை என்பதை இந்திய மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். 


to KV: Karuna's interview Part 1 Ilangai_13_06_2013
விநாயக மூர்த்தி முரளிதரன்

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum