Coffeehouse for desis
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Life of Sri Lankan Tamils Part 2

Go down

Life of Sri Lankan Tamils Part 2 Empty Life of Sri Lankan Tamils Part 2

Post by Rishi Wed Jun 26, 2013 10:43 pm

Life of Sri Lankan Tamils Part 2 Ilangai_20_06_2013_1
யாழ் நகர மக்களுடன் நமது நிருபர் எஸ்.ஜே.இதயா..



இவையெல்லாம்தான் அங்கு நிலவும் உண்மை என்றாலும், அதை ஏற்க இங்கு பலர் தயாராக இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை என்பது இங்குள்ள அரசியல் தலைவர்கள் பலருக்கு ஒரு ‘அரசியல் தேவை.’

இலங்கைத் தமிழரைப் பற்றி பேச இவர்கள்தான் அத்தாரிட்டி என்பது போல் நடந்து கொள்கிறார்கள். ‘மற்றவர்கள் இலங்கைத் தமிழரின் நலனைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. இவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன பெற்றுத் தர விரும்புகிறார்களோ, அதைத்தான் மற்ற தமிழக மக்களும் விரும்ப வேண்டும். அவ்வளவு ஏன், இவர்கள் விரும்புவதைத்தான், இலங்கைத் தமிழர்களும் விரும்ப வேண்டும்’ என்று எதிர்பார்க்கிறார்கள். இலங்கை மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு என்ன என்பதை அறிந்து கொள்வதில் கூட இவர்களுக்கு ஆர்வமில்லை. இவர்களுக்குத் தேவை தனி ஈழம். இவர்கள் அங்கு சென்று வாழப் போவதில்லை. ஆனால், அங்குள்ள மக்களுக்கு இவர்கள்தான் தீர்வு சொல்வார்கள். அங்குள்ள மக்கள் ‘தமிழீழம் வேண்டாமப்பா... எங்களை உயிரோடு விட்டால் போதும்’ என்று சொன்னால் கூட, ‘அதெல்லாம் கூடாது, நீ தமிழீழம் பெற்றுத்தான் தீர வேண்டும்’ என்று இவர்கள் அடம் பிடிப்பார்கள்.

‘அங்குள்ள பெருவாரியான மக்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார்கள்’ என்று சொன்னால், ‘அப்படியானால் பொது வாக்கெடுப்பு நடத்து, உண்மை தெரிந்து விடும்’ என்கிறார்கள். அப்படியே இலங்கைத் தமிழர் மத்தியிலும் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி ‘தனி ஈழம் வேண்டாம்’ என்று ரிஸல்ட் வந்தாலும், இவர்கள் ஒத்துக் கொள்ளவா போகிறார்கள்? ‘இலங்கை ராணுவம் கள்ள ஓட்டு போட்டது; இலங்கை அகதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை; புலம் பெயர்ந்த தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை; எங்களிடம் வாக்கெடுப்பு நடத்தவில்லை’ என்றுதான் புகார் பட்டியல் வாசிப்பார்கள். அதிலென்ன சந்தேகம்?

‘தங்களுக்கு ஒரு தேவை என்றால் அங்குள்ள மக்களே போராட மாட்டார்களா?’ இந்தக் கேள்விக்கு ‘ராணுவம்தான் அவர்களை உருட்டி, மிரட்டி ஒடுக்கி வைத்துள்ளதே’ என்று பதிலளிக்கிறார்கள். இங்குள்ள இளைஞர்கள் ஈழத்துக்காகத் தீக்குளிக்கும்போது, அங்கு இன்னமும் ஈழக் கோரிக்கை இருக்கிறதென்றால், அங்குள்ள ஒரு இளைஞனாவது இந்த நான்கு வருடத்தில் ஈழத்துக்காகத் தீக்குளித்திருக்க மாட்டானா? தற்கொலை செய்து கொள்வதற்குமா ராணுவத்தைக் கண்டு பயப்படுவான்? அங்கு நிலைமை அப்படியில்லை என்பதால்தான் அங்கு போராட்டங்கள் இல்லை. புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது. இங்குள்ளவர்கள்தான் விடவில்லை.

‘தமிழர்கள் அங்கு சிங்களர்களால் ஒடுக்கப்படுகிறார்கள். எனவே, அங்கு சேர்ந்து வாழ முடியாது. தனிநாடுதான் சரிப்பட்டு வரும்’ என்று ஒரு வாதம் வைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அங்குள்ள மலையகத் தமிழர்கள்தான் யாழ்ப்பாண தமிழர்களை விட ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த நிலமில்லை, வீடில்லை. எஸ்டேட் வழங்கும் வரிசை வீடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழீழம் கேட்கவில்லை; தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.

Rishi

Posts : 5129
Join date : 2011-09-02

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum